×

வேலூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைப்பு

வேலூர் : வேலூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டது.வேலூர் மாநகராட்சியில் ஒவ்வொரு நாளும் 200 டன்களுக்கு மேல் குப்பைகள் சேருகிறது. இதில் பல டன்கள் மக்காத கழிவுகளான பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி கழிவுகள் மட்டுமே அடங்கும். இக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவி வந்த நிலையில், பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை தங்களுக்கான எரிபொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமென்ட் ஆலைகள் தெரிவித்தன.

இதில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா, திண்டுக்கல் போன்ற இடங்களில் உள்ள சிமெண்ட் உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலிருந்து மறுசுழற்சி செய்ய முடியாத 27 டன் குப்பைகளும், வேலூர் ஓட்டேரியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலிருந்து 25 டன் குப்பைகளும் லாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இவற்றை சிமெண்டு தொழிற்சாலையினர் எரிபொருளாக பயன்படுத்த உள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dindigul district ,Vellore… ,Dinakaran ,
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!